யாழ்.பல்கலைக்கழகத்தின் இந்து கற்கைகள் பீடத்தின் பீடாதிபதிக்கு கொரோனாத் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த பீடாதிபதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 88 பேருக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் அவரின் குடும்பம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment