யாழ்ப்பாணத்தில் இன்று மூவர் கொரோனாவுக்கு பலியாகினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தெல்லிப்பழை பிரதேச செயலக அபவிருத்தி உத்தியோகத்தர் (வயது-44) இன்று நண்பகல் உயிரிழந்தார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்வடைந்துள்ளது.
Post a Comment