இந்திய மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டம் இலங்கை தமிழர்களை வஞ்சித்துள்ளது - தமிழக முதல்வர் ஸ்டாலின் - Yarl Voice இந்திய மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டம் இலங்கை தமிழர்களை வஞ்சித்துள்ளது - தமிழக முதல்வர் ஸ்டாலின் - Yarl Voice

இந்திய மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டம் இலங்கை தமிழர்களை வஞ்சித்துள்ளது - தமிழக முதல்வர் ஸ்டாலின்




இலங்கை தமிழர்கள் இந்திய மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் வங்கதேசத்தை சேர்ந்தவர்க்ள வரலாம் என்றால் இலங்கையை சேர்ந்தவர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து
முகாம்களிலும்இ வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

 அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள் இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது. 

ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளதுஎன அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019-ஐ இரத்து செய்யக் கோரும் அரசினர் தனித் தீர்மானத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முன்மொழிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரைபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்

குடியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் சட்டபூர்வமான உரிமை. இந்திய நிலப்பரப்புக்குள் தங்கள் இருப்பிடத்தைக் கொண்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிட வேண்டும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின்படி, இந்திய நிலப்பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் சட்டப்படியான சமத்துவம், அனைவருக்கும் சட்டப்படியான பாதுகாப்பு ஆகிய அம்சங்களை அரசு மறுக்க முடியாது.

 1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, குடியுரிமை பெற மதம் ஒரு அடிப்படையாக இல்லை. ஆனால், இன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்த திருத்தத்தில், மதத்தை ஒரு அடிப்படையாக மாற்றுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவை மதச்சார்பற்ற அரசு என்கிறது. அதன்படி பார்க்கும் போது, மதத்தை அடிப்படையாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் கொண்டு வர முடியாது. அதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டியுள்ளது. 

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019, {Citizenship (Amendment) Act, 2019} என்று பெயர் சூட்டப்பட்டது.

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. 

இசுலாமியர் இதில் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளனர். இது மக்களை மதரீதியாகப் பிரிக்கிறது என்பதால், இந்தச் சட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்த்தது. இந்தச் சட்டமானது, நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு, குறிப்பாக மதச்சார்பற்ற தன்மைக்கு, முற்றிலும் எதிரானதாகும் என்ற காரணத்தினாலும், அது நாட்டு நலனுக்கு உகந்ததல்ல என்பதாலும் எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

“அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது CAA” : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!
இச்சட்டத்தினை எதிர்க்கும் வகையில், அது நிறைவேற்றப்படுவதற்கு முன்பே, அதனை எதிர்த்து இந்த மாமன்றம் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம். 

ஆனால், அக்கோரிக்கை முந்தைய அரசால் ஏற்கப்படவில்லை. எனினும், இது தொடர்பாக, இச்சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், தோழமைக் கட்சிகளும் வாக்களித்திருக்கின்றன.

அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும், மத ரீதியிலோ, இன ரீதியிலோ, எந்த நாட்டிலிருந்து வருபவர்கள் என்ற ரீதியிலோ அவர்களைப் பிரித்துப் பார்க்கக்கூடாது என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். 

வாழ்க்கையை இழந்து, சொந்த நாட்டில் வாழ முடியாமல், வேறு நாட்டுக்கு வருபவர்களிடம் பாகுபாடு காட்டுவது அகதிகளுக்கு நன்மை செய்வது ஆகாது. இது ஏற்கெனவே துன்பப்பட்ட மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கிப் பார்ப்பதாகும்.

அரசியல் ரீதியான பாகுபாட்டை, சட்டரீதியான பாகுபாடாக உறுதிப்படுத்துவது மிகமிகத் தவறானது ஆகும். அதிலும் குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் இந்தச் சட்டத்தின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள். 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் வரலாமென்றால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்?

இதுதான் இலங்கைத் தமிழருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம். இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் வாழ முடியாமல் தமிழகம் தப்பி வந்து

முகாம்களிலும், வெளியிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப நினைக்காதவர்கள், இங்கு குடியுரிமை பெற்று வாழலாம் என்று நினைப்பவர்களது உரிமையை இந்தச் சட்டம் பறிக்கிறது. ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை என்பதைவிட

வஞ்சனையுடன் செயல்படுகிறது. அதனால்தான் இதனை எதிர்க்க வேண்டி உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு மாறானது இந்தச் சட்டத் திருத்தம். 

இந்தச் சட்டத் திருத்தம், இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழ்விடச் சூழல் எனப் பல்வேறு வகைகளில் வேறுபட்டிருந்தாலும், இணைந்து வாழும் மக்களைப் பிரித்து வைக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post