வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்று உயிரிழந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள, கிணத்தில் குளிக்கச்சென்ற நிலையில் கிண்றுநீரினுள் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில்கிராமமக்களின் முயற்சியால் கிணற்றுநீர் வெளியில் இறைக்கப்பட்டு நேற்று இரவு 11.30 மணியளவில் குறித்தசிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் அவரது சடலத்தினை சுகாதாரநடைமுறைகளை பேணி எரியூட்டுவதற்கு சுகாதாரபிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment