தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வேலணையில் உலருணவு விநியோகம் - Yarl Voice தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வேலணையில் உலருணவு விநியோகம் - Yarl Voice

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வேலணையில் உலருணவு விநியோகம்



தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் நேற்று 19.12.2021 (ஞாயிற்றுக்கிழமை) வேலணை, தாவடி, நாவற்குழி, மயிலிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழுகின்ற, தொழில்வாய்ப்பிழந்த மற்றும் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதனொரு கட்டமாகவே ஞாயிற்றுக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ள  100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post