பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடரும் கையெழுத்து போராட்டம்! - Yarl Voice பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடரும் கையெழுத்து போராட்டம்! - Yarl Voice

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடரும் கையெழுத்து போராட்டம்!




பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் - உடுப்பிட்டியில் இடம்பெற்றிருந்தது.

26ஆவது நாளாக இன்று காலை 9.30 மணியளவில் உடுப்பிட்டி பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post