உக்ரைன் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற ரஷ்ய வீரர்கள்: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் - Yarl Voice உக்ரைன் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற ரஷ்ய வீரர்கள்: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் - Yarl Voice

உக்ரைன் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற ரஷ்ய வீரர்கள்: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்



உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் சமீபத்தில் வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷ்ய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு தற்போது பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷ்ய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகின்றன.

அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக பாலியல் வல்லுறவு புரிந்திருப்பது பிரேதப் பரிசோதனை யில் தெரியவந்துள்ளதாக தடயவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்துள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்ட தால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களைச் சேர்ந்த பெண்கள், ரஷ்ய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post