கறுப்புயூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!! - Yarl Voice கறுப்புயூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!! - Yarl Voice

கறுப்புயூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு!!



1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை
நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று மேற்கொள்ளப்பட்டது.

வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில்  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

1983 ஜூலை 23 நடந்த கறுப்பு ஜூலைக் கலவரத்தின்போது தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டதுடன் சொத்துகளும் அழித்து நாசமாக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post